தலைநகருக்காக திருப்பதி நகர வீதிகளில் பிச்சை எடுத்த முன்னாள் முதல்வர்

அமராவதி தலைநகர் போராட்டத்திற்காக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, திருப்பதி நகர வீதிகளில் பிச்சை எடுத்து நிதி திரட்டினார்.


 


தற்போதைய ஆந்திர மாநிலத்திற்கு அமராவதியை தவிர்த்து விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய நகரங்களையும் மாநில தலைநகரங்களாக அறிவிக்கும் முயற்சியில் தற்போதைய ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு இனிப்பான செய்தி!!

ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்களை ஏற்படுத்துவது பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட குழு தற்போதைய தலைநகர் அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகத்தை ஏற்படுத்தி நிர்வாகத் தலைநகராகவும், கர்னூலில் உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்தி நீதி பரிபாலன தலைநகராகவும் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.